தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் ஒருவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீடு மற்றும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்திலும் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையம் மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், போலீசார் நடத்திய விசாரணையில் போதையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைதான இளைஞர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb thread unknown person arrested


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->