கோவையில் என்ஐஏ ரெய்டு!  - Seithipunal
Seithipunal


பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ சோதனை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து வந்த தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

கர்நாடக மாநிலம், பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கபே ஹோட்டலில் கடந்த மார்ச் 1-ந்தேதி குண்டுவெடிப்பு நடந்தது.

இது குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று காலை கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருத்துவர்கள் இல்லத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற வழக்கு தொடர்பாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bengaluru Blast Rameshwaram Cafe NIA Investigation kovai NIA Raid 


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->