பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்து! பீர் பாட்டில்களை அள்ளிச் சென்ற குடிமகன்கள்! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் இருந்து விழுப்புரம் நோக்கி நேற்று நள்ளிரவு பீர் பாட்டியை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரவு 12 மணி அளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த திடீரென சாலையின் ஓரம் கவிழ்ந்தது. 

இதில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் உடைந்து பீர் மதுபானம் ஆறாக ஓடியது. விபத்து நல்லிரவு ஏற்பட்டதால் லாரியை மீட்டு வேறொரு லாரிக்கு பீர் பாட்டில்களை மாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. 

மேலும் அந்த பகுதியில் மின்விளக்கு வசதி இல்லை. இதனால் மதுராந்தகம் போலீசார் விபத்து ஏற்பட்ட இடத்தில் விடியும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இருப்பினும் போலீசார் வருவதற்குள் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றனர். இந்த விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுனர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். 

லாரி சாலையோரம் கவிழ்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

beer bottles loaded truck overturned accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->