வேலூரில் பரபரப்பு - கண்ணாடி ஜாடிக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை.! - Seithipunal
Seithipunal


வேலூரில் பரபரப்பு - கண்ணாடி ஜாடிக்குள் கிடந்த பச்சிளம் குழந்தை.!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த ஓட்டேரி பகுதியில் இருந்து பாலமதி செல்லும் வழியில் சாலையோரம் உள்ள புதரில் குழந்தையின் உடல் ஒன்று கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். 

அங்கு கடைகளில் வைக்கப்படும் பெரிய கண்ணாடி ஜாடியில் அடைக்கப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக அந்த கண்ணாடி ஜாடியை உடைத்து, குழந்தையின் உடலை எடுத்துப் பார்த்தனர். 

அதில் அந்த குழந்தையை அதன் பெற்றோர் பிறந்த சில மணி நேரத்திலேயே கொன்று வீசியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையின் உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர், போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியும், சுற்றுப்புற பகுதிகளில் சமீபத்தில் கர்ப்பிணிகளாக இருந்தவர்களின் விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். 

பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில், கண்ணாடி ஜாடியில் அடைக்கப்பட்டு சாலையோரம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby body found in vellore


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->