சிறுவன் கடத்தல் வழக்கு: ஏடிஜிபி ஜெயராமிடம் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த விசாரணை முடிவு..! - Seithipunal
Seithipunal


சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பில் ஏடிஜிபி ஜெயராமிடம் சுமார் 20 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணை முடிவடைந்துள்ளது. போலீசாரின் விசாரணைக்கு ஏடிஜிபி ஜெயராம் ஒத்துழைப்பு வழங்குவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அத்துடன், விசாரணைக்குப் பின் ஏடிஜிபி ஜெயராம் தனது சொந்த காரில் ஏறிச் சென்றதாக கூறப்படுகிறது.

ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்திற்கு அவர் அழைத்து சென்று விசாரணை செய்யப்பட்டார்.

சுமார் 16 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அடுத்து திருவாலங்காடு காவல் நிலையத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பிறகு சிறையில் அடைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏடிஜிபி ஜெயராம் தனது சொந்த காரில் ஏறிச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆள் கடத்தல், குற்றச்செயலில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளிட்ட 03 பிரிவுகளில் ஏடிஜிபி ஜெயராம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வரவேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ATGP Jayaram questioned for over 20 hours in child abduction case


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->