பொதுத்தேர்வு முடிவு - முதலிடத்தை பிடித்த அரியலூர்.!!
ariyalur won first place in 12 public exam
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இந்தத் தேர்வில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 95.03 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். அதன் முழு விவரத்தை இங்குக் காண்போம்.
பாடவாரியாக தேர்ச்சி விகிதம்:-
தமிழ்- 99.15 சதவீதம், இயற்பியல்- 99.22 சதவீதம், வேதியியல்- 98.99 சதவீதம், உயிரியல்- 99.15 சதவீதம், கணிதம்- 99.16 சதவீதம், தாவரவியல்- 99.35 சதவீதம், விலங்கியல்- 99.51சதவீதம், கணினி அறிவியல்- 99.73 சதவீதம், வணிகவியல்- 98.36 சதவீதம், கணக்குப்பதிவியல்- 97.36சதவீதம், பொருளியல்- 98.17 சதவீதம், கணினி பயன்பாடுகள்- 99,78 சதவீதம், வணிக கணிதம், புள்ளியல்- 98.78 சதவீதம்.
பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்றவர்கள் விவரம்:-
தமிழ்- 135, இயற்பியல்- 1,125, வேதியியல்- 3,181, உயிரியல்- 827, கணிதம்- 3,022, தாவரவியல்- 269, விலங்கியல்-36 , கணினி அறிவியல்-9,536, வணிகவியல்- 1,624, கணக்கு பதிவியல்- 1,240.
பொதுத் தேர்வில் முதல் 5 இடங்கள் பெற்ற மாவட்டங்கள்:-
அரியலூர்- 98.80 சதவீதம், ஈரோடு, 98 சதவீதம், திருப்பூர்-97.50 சதவீதம், கோவை- 97.50 சதவீதம், கன்னியாகுமரி-97 சதவீதம்.
English Summary
ariyalur won first place in 12 public exam