அரியலூர் | கள்ளகாதலால் கர்ப்பம்! குழந்தையை கொன்று தாய் தற்கொலை! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம்: ஆண்டிமடம் அருகே கொடுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 27). இவருக்கும் மேல் திருதத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

ராஜேஸ்வரியின் கணவர் கொளஞ்சி, திருமணம் ஆகி சில ஆண்டுகளுக்குள் இறந்து விட்டதால், இவர் திருப்பூரில் தங்கி அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

வேலை பார்த்த இடத்தில் ராஜேஸ்வரிக்கு தகாத பழக்கம் ஏற்பட்டு கர்ப்பமாகியுள்ளார். பின்னர் ராஜேஸ்வரி நிறைமாத கர்ப்பிணியாக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில், தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  

ராஜேஸ்வரிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ராஜேஸ்வரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிகிறது. 

இதன் காரணமாக ராஜேஸ்வரி அவரது வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது 4 மாத ஆண் குழந்தை அருகில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் இறந்த நிலையில் கிடந்துள்ளது.

அதனை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து குவாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், ராஜேஸ்வரி மற்றும் 4 மாத குழந்தையின் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் தற்கொலை செய்வதற்கான காரணம் குறித்து உறவினர்களிடத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ariyalur Pregnancy cheating mother committed suicide


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->