சொத்துக்காக அரங்கேறிய பெரும் துயர்.. மகன், மருமகளுடன் தாய் அரங்கேற்றிய பெரும் கொடூரம்.!!
Ariyalur Murder case police investigation
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமங்கலம் அருகேயுள்ள சுந்தரேசபுரம் தெற்கு பகுதியை சார்ந்தவர் ஸ்வாமிநாதன் (வயது 90). இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவர் அங்குள்ள தெற்கு தெரு பகுதியில் குடிசையமைத்து தனியாக வசித்து வருகிறார்.
சாமிநாதனிற்கு இரண்டு மனைவிகள் உள்ள நிலையில், முதல் மனைவி சிவபாக்கியம் இறந்துள்ளார். இவருக்கு தனலட்சுமி (வயது 65) என்ற மகளும், தர்மராஜ் (வயது 60) என்ற மகனும் இருக்கின்றனர். இவரது இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம் (வயது 70). இவரது மகன் தங்கமணி (வயது 48).
சாமிநாதன் தனது பூர்வீக சொத்துக்களை இரண்டு மனைவியின் மகன் மற்றும் மகளுக்கு பிரித்து வழங்கிய நிலையில், முதல் மனைவியின் மகன் தர்மராஜ் மற்றும் இரண்டாவது மனைவியின் மகன் தங்கமணிக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், இரவு நேரத்தில் சாமிநாதன் தனது குடிசை வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். பின்னர் மறுநாள் காலை தனலட்சுமி சாமிநாதனை பார்க்க சென்ற நிலையில், சாமிநாதன் அரிவாளால் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக இருந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த தனலட்சுமி இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயம்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையில், சாமிநாதனின் இரண்டாவது மனைவி பஞ்சவர்ணம், மகன் தங்கமணி மருமகள் சாந்தி ஆகியோர் சேர்ந்து சாமிநாதனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Ariyalur Murder case police investigation