பைக்கில் சென்ற போது நெஞ்சுவலி - அரக்கோணம் சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு.!!
arakonam health inspector died for heart attack
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி பகுதியைச் சேர்ந்தவர் விமல்ராஜ். இவர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அடுத்த நாகவேடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், விமல்ராஜ் தனது வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கும்பினிப்பேட்டை வழியாக நாகவேடு நோக்கி நேற்று வந்தார். இவர் பருத்திபுத்தூரில் தனது சுகாதார குழுவினருடன் வாகனத்தை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலிப்பதாக தெரிவித்தார்.
உடனே அங்கிருந்தவர்கள் அவரை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விமல்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை மாவட்ட சுகாதார துறை துணை இயக்குநர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விமல்ராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
English Summary
arakonam health inspector died for heart attack