நெல்லையப்பர் கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் ஆனி தேரோட்டம்.! - Seithipunal
Seithipunal


நெல்லையப்பர் கோவிலில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் ஆனி தேரோட்டம்.!

தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான மற்றும் புகழ் பெற்ற சிவாலயங்களில் நெல்லையப்பர் கோவிலும் ஒன்று. இந்தக் கோவிலில் பல்வேறு விதமான விழாக்கள் நடைபெறுவைத்து வழக்கம். அந்த விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆனித் தேரோட்ட திருவிழா. இது ஒவ்வொரு வருடமும் ஆனி மாதம் நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த விழா நாட்களில் சுவாமி-அம்பாள் தினமும் காலை, மாலையில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தனர். 

இந்த விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆசிய கண்டத்திலேயே அதிக எடை கொண்ட தேர் என்ற பெருமையுடன், நான்கு ரத வீதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் ஆடி, அசைந்து வலம் வருகிறது.

இந்தத் தேரோட்டத்தில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு இந்தத் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். 

இந்தத் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், உதவி கமிஷனர்கள், காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ani chariot start nellaiyappar temple


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->