12ம் தேதி பிரதம மந்திரி கிசான் நிதி, பசல் பீமா யோஜனா குறித்து விழிப்புணர்வு முகாம்..விவசாயிகளுக்கு அழைப்பு!
An awareness camp about the Prime Ministers Kisan Fund and the Pasal Beema Yojana on the 12th Invitation to farmers
திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் நடைபெற்ற வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்க விழிப்புணர்வு கூட்டத்தில் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு குறித்து செயல்விளக்கம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திரூர் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் வேளாண் வளர்ச்சிக்கான பிரச்சார இயக்கத்தை பல்வேறு கிராமங்களில் தினமும் 6 கிராமங்கள் வீதம் 3 விஞ்ஞானிகளை கொண்ட 3 குழுக்கள் மூலம் ஜூன் 12 தேதி வரை 15 நாட்களுக்கு வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, மீன்வளம் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற உள்ளது.
இதற்காக வெள்ளியூர், புலியூர்,காஞ்சிபாடி, திருத்தனி,ஆலப்பாக்கம் பூரிவாக்கம் ஆகிய இடங்களிலும் பிரியாங்குப்பம், காரனை, புதுமாவிலங்கை, சிற்றம்பாக்கம்,குமரஞ்சேரி, இருளஞ்சேரி ஆகிய. இடங்களிலும் நடத்தப்பட்டது. மேலும் ட்ரோன் மூலம் உரம் தெளிப்பு செயல்விளக்கம் வெள்ளியூரில் நடத்தப்பட்டது.
இக்கூட்டங்களில் கரீப் பருவத்திற்கேற்ற உயர் விளைச்சல் நெல் இரகங்கள், தோட்டக்கலைப் பயிர்களில், உர மேலாண்மை, புதிய தொழில்நுட்பத்துடன், பயிர் பூஸ்டர்கள், பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து வேளாளர் அறிவியல் நிலையம், மத்திய உயர் நீர் உயிரிகள் மையம் விஞ்ஞானிகள், வேளாண்மை மற்றும். இதர துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
மேலும் மாநில அரசு மற்றும் மத்திய அரசு திட்டங்களான பிரதம மந்திரி கிசான் நிதி, பசல் பீமா யோஜனா, மண்வள அட்டை, வேளாண் கட்டமைப்பு நிதி போன்றவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஜீன் 12ம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டங்களில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திரூர் வேளாண்மை அறிவியல் நிலைய திட்டஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
English Summary
An awareness camp about the Prime Ministers Kisan Fund and the Pasal Beema Yojana on the 12th Invitation to farmers