நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடத்த திட்டம்.. தேர்தல் ஆணையம் அதிரடி!
Plans to conduct a special and radical revision of the voter list across the country Election Commission takes action
பீகாரில் நடைமுறைக்கு வந்ததைப் போல, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. இந்த திட்டத்தின் நடைமுறை அம்சங்கள் குறித்து விவாதிக்க வரும் 10ஆம் தேதி அனைத்து மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் ஒரு உயர்மட்டக் கூட்டம் நடைபெற உள்ளது.
ஞானேஷ் குமார் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்ற பின், தலைமைத் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெறும் மூன்றாவது முக்கிய சந்திப்பாக இது அமைகிறது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இந்த வாக்காளர் பட்டியல் திருத்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
ஆனால், எதிர்க்கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்து வருகின்றன. பாஜகவுக்காக வாக்குகளை திருடும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த நாடகத்தை நடத்துகிறது என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதேசமயம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் வாக்காளர் உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து 16 நாள் நடைபயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் SIR திட்டம் தொடங்கப்படும் வாய்ப்பு உள்ளதாக. வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து சட்டவிரோதமாக வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களை கண்டறிந்து நீக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என தேர்தல் ஆணையம் விளக்குகிறது.
பீகாரில் நடைபெற்ற சிறப்பு திருத்தத்தில் மட்டும் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Plans to conduct a special and radical revision of the voter list across the country Election Commission takes action