#BREAKING | ஓபிஎஸ் வழக்கில் அதிரடி திருப்பம்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் அண்மையில் அறிவிக்கப்பட்ட பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த தனிநீதிபதி, ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் தொடுத்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

இதனை தொடர்ந்து உடனடியாக ஓபிஎஸ், தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை ரத்து செய்ய கோரி, உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில், மேல்முறையீடு செய்தார். 

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த வழக்கை விசாரணை செய்வதாக தெரிவித்தது. திடீர் திருப்பமாக இந்த வழக்கை நாழி விசாரணை செய்வதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, நேற்று இந்த வழக்கு விசராணைக்கு வர இருந்த நிலையில், "தனிநீதிபதியின் தீர்ப்புக்கு எதிர்க்க தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு வரும் வரை, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை செயல்பட தடை விதிக்க வேண்டும்" என்ற ஓ பன்னீர்செல்வம் மனுவுடன் தங்கள் மனுக்களையும் விசாரிக்க கோரி மனோஜ் பாண்டியன், பிரபாகர் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இதன் காரணமாக வழக்கு இன்று விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், நாளை விசாரணை செய்வதாக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK GS ban case ops side


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->