சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி: எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ் நாடு முழுவதும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் செய்ய இருக்கும் நிலையில், கழகத்தின் சார்பில் மேற்கொள்ள இருக்கும் இப்பணியை, ஏற்கௌவே நியமிக்கப்பட்டிருந்த மாவட்டப் பொறுப்பாளர்கள் கண்காணித்து செய்து முடித்திட அறிவுறுத்தல்.

1.1.2026-ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக்கொண்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள உள்ளது.

அதன்படி, முறையான வாக்காளர் பட்டியல் தயார் செய்வதற்கு ஏதுவாக, கழகத்தின் சார்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை சரிசெய்வதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கழகத்தின் சார்பில் பூத் (பாகம்) கிளைக் கழகங்களை அமைப்பதற்காக, மாவட்டம் வாரியாக ஏற்கெனவே நியமிக்கப்பட்டு அப்பணி நிறைவடைந்த காரணத்தால், கடந்த 11.10.2025 அன்று விடுவிக்கப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்கள், மீண்டும் 4.11.2025 அன்று முதல் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு நேரில் சென்று, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியினை கண்காணித்து, மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து முழுமையாக செய்து முடித்து, அதன் விபரங்களை தலைமைக் கழகத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Edappadi palanisami SIR EC


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->