அருப்புக்கோட்டை விநாயகர் கோவிலுக்கு இயந்திர யானை வழங்கிய நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர்..!
Actress Trisha and volunteers donate mechanical elephant to Aruppukottai Vinayagar Temple
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் மற்றும் வராகி அம்மன் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.06 லட்சத்தில் எந்திர யானையை வழங்கியுள்ளனர்.
சுமார் 03 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உருவாக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு நிஜ யானை போல காட்சியளிக்கும் இதற்கு கஜா என பெயரிட்டுள்ளார்கள்.
-fu5pc.png)
கேரளாவில் உருவாக்கப்பட்ட இந்த எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சக்கரங்கள் மூலம் சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த எந்திர யானை காதுகள், தும்பிக்கை மற்றும் தலையையும் அசைக்கிறது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது.
குறித்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி கோவிலில் நேற்று நடைபெற்றுள்ளது. அப்போது அந்த யானை நகர வீதிகளில் அழைத்து செல்லப்பட்டபோது, மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.
English Summary
Actress Trisha and volunteers donate mechanical elephant to Aruppukottai Vinayagar Temple