விழுப்புரம்: அரசூர் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டம் சித்தானங்கூர் கிராமத்தில் காரின் டயர் வெடித்து எதிரில் வந்த அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சித்தானங்கூர் கிராமத்தில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கொடைக்கானலுக்கு சென்று விடுமுறையை கழித்து விட்டு நான்கு பேர் சொந்த ஊரான முகையூர் நோக்கி திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் வந்த காரின் முன் பக்க வலது டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சென்டர் மீடியனில் மோதி எதிர் திசையில் வந்த மதுரை அரசு பேருந்து மீது விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த ராணுவ வீரர் சகாயராஜ் மற்றும் பிரிட்டோ மேரி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த புனிதா மேரி மற்றும் குழந்தைகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Accident in Villupuram 2 peoples death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->