17 வயது கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.! வாலிபருக்கு ஆயுள் தண்டனை.! - Seithipunal
Seithipunal


17 வயது கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் தின்னகுளம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வீரமணி (26). இவர் 17 வயதான கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த 2021ஆம் ஆண்டு திருப்பூருக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதைத்தொடர்ந்து பெற்றோர் மாணவியை காணவில்லை என்று புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வீரமணியுடன் இருந்த மாணவியை மீட்டனர். பின்பு மாணவியை அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீரமணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீரமணிக்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 2 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 2 லட்சம் அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Youth who sexually assaulted a 17 year old college girl was sentenced to life imprisonment in Pudukkottai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->