மேடவாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னை மேடவாக்கத்தில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

மேற்கு வங்கம் கணேஷ்பூர் பகுதியை சேர்ந்தவர் கட்டிடத்தொழிலாளி சுகுமார் தாஸ்(22). இவர் சென்னை மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். 

அப்பொழுது எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். 

இதில் பலத்த காயமடைந்த சுகுமார் தாஸை மீட்டு, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகுமார் தாஸ் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A worker fell to the second floor and died in chennai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->