கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொன்ற மனைவி., சேலத்தில் நடந்த அவலம்..!! - Seithipunal
Seithipunal


கள்ளகாதலனுடன் வாழ இடைஞ்சலாக இருப்பதால் கணவனை கொன்ற மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம், புள்ளாக்கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தயானந்தன்.  இவருக்கு திருமணமாகி அன்னபிரியா என்ற மனைவியும் 2 வயது ஆன் குழந்தையும் உள்ளது.

தயானந்தன் அங்கு நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்குன் அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் வட்டி பணம் தரவேண்டி இருந்தது. இதனால் அவர் அடிக்கடி  தயானந்தன் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

அப்போது தயானந்தனின் மனைவி அன்னபிரியாவிற்கும் முருகனுக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் ஒரு கட்டத்தில் கள்ளகாதலாக மாறவே இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த தயானந்தன் இருவரையும் கண்டித்துள்ளார். கனவன் உயிருடன் இருந்தால் தன் உல்லாசத்திற்கு இடைஞ்சல் ஏற்படும் என நினைத்த அவரது மனைவி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

இதனை அடுத்து, சம்பவதன்று தயானந்துக்கு தூக்கமாத்திரை கொடுத்துள்ளர். பின்னர் கள்ளகாதலனுக்கு செல்போனில் அழைத்து வீட்டிற்கு வர சொல்லி இருக்கிறார். இருவரும் இணைந்து தயானந்தை கட்டையால் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு வழக்கு பதிவு செய்தனர். இதனை அடுத்து அன்னபிரியா மற்றும் முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Woman killing her husband due to illegal relationship


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->