என்னது! மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ஊரா...! பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்...! காரணம் என்ன?
A town affected by jaundice boy who died tragically What is the reason
கடலூரில் விருத்தாசலம் அருகேயுள்ள தீவலூரை சேர்ந்த பொன்னரசன் என்பவரது மகன் 12 வயதான முத்தமிழ் நிலவன் என்பவர். அந்த ஊரில் சில காலமாக சிலருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவ பரிசோதனை செய்தபோது சிறுவன் முத்தமிழ் நிலவன், அவனது தாய் முத்தழகி, 2 சகோதரிகளுக்கு மஞ்சள் காமாலை நோய் இருக்கும் செய்தி தெரியவந்தது.இதில் சிறுவன் 'முத்தமிழ் நிலவன்' திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
அவனது தாய், அக்காள் ஆகியோர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில்,"தங்களது ஊரில் 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்குள்ள குடிநீர் தொட்டி நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாமல் இருப்பதால் சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தனர்.
ஆகையால், தீவலூர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
A town affected by jaundice boy who died tragically What is the reason