மாம்பழம் பறிக்க முயன்றபோது தவறி விழுந்து பிளஸ் 1 மாணவன் பலி!  - Seithipunal
Seithipunal


மாம்பழம் பறிக்க முயன்றபோது மரத்தில் இருந்து தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் மார்த்தாண்டம் அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள முளங்குழி வாறவிளையை சேர்ந்த தம்பதி  பிரகாஷ். ஜாஸ்மின் ஷைனி.  16 வயதான இவர்களின் மூத்த மகன் அபிஷேக் அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 பயின்று வந்தார். அவர் பிளஸ் 1 தேர்வு எழுதிய நிலையில் அதன் முடிவுக்காக காத்திருந்தார்.

இந்நிலையில், கோடைவிடுமுறையில் இருந்த அபிஷேக் சூசைபுரம் பகுதியில் உள்ள ஒரு மாமரத்தில் ஏறி மாம்பழம் பறிக்க முயன்றார்.அப்போது எதிர்பாராத விதமாக மா மரத்தின் கிளை திடீரென்று ஒடிந்து மரத்தில் இருந்து கீழே விழுந்த அபிஷேக் படுகாயம் அடைந்தார். உடனே அவரை  மீட்ட அக்கம்பக்கத்தினர்  குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அங்கு பிரகாசை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.  மா மரத்தில் ஏறி மாம்பழம் பறித்த போது மரக்கிளை ஒடிந்ததால் தவறி விழுந்து மாணவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

A Plus One student died after accidentally falling while trying to pick a mango


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->