விடுதி வளாகத்தில் தூக்கில் தொங்கிய 9-ம் வகுப்பு மாணவி..உறவினர்கள் போராட்டம்!
A 9th grade student hanging in a hostel premises Relatives protest
காளையார்கோவில் அருகே விடுதியில் தங்கியிருந்த 9-ம் வகுப்பு மாணவி, வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்தது கொலையா தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
காளையார்கோவில் அருகே மாணவி ஒரு ஆண்டிச்சியூரணி கிராமத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து பள்ளியில் பயின்றுவந்தார்.நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற மாணவி,மறுநாள் அதிகாலை விடுதி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
தகவலின்பேரில் காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்."அந்த உயரமான மரத்தில் ஒரு சிறுமி தனியாக எப்படி ஏறி, தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முடியும்?" என பார்வையில் சந்தேகம் எழுப்பிய மாணவியின் பெற்றோர், உறவினர்கள், விடுதி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர்.
இதையடுத்து மாணவியின் உடலைப் பெற மறுத்த உறவினர்கள், சிவகங்கை அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் இளையான்குடி – மானாமதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு, கோட்டாட்சியர், தாசில்தார் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், உறவினர்கள் உறுதியுடன் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
இந்தநிலையில் காளையார்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தக்கோரி உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
English Summary
A 9th grade student hanging in a hostel premises Relatives protest