கன்னியாகுமரி :: தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதி விபத்து - 9 பேர் காயம் - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பு சுவரில் அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து பயணிகளுடன் மார்த்தாண்டம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளமடம் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிளுக்கு வழிவிட முயன்ற போது அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஒன்பது பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பதால் மாவட்டம் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 injured in government bus accident in kanniyakumari


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->