எண்ணூர் அனல்மின் நிலையத்தில் சாரம் சரிந்து விழுந்து விபத்து: 09 பேர் பலி; பலர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


எண்ணூர் அனல்மின் நிலையத்தின் 04-வது அலகில் விரிவாக்கப் பணியின் போது, சாரம் சரிந்து விழுந்ததில் 09 தொழிலாளர்கள்  உயிரிழந்துள்ள சம்பவம் சோத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எண்ணூரில் உள்ள அனல்மின் நிலையத்தின் 04-வது அலகில் முகப்பு பகுதியில் கட்டுமான பணியில், 30க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாரம் சரிந்து விழுந்துள்ளது. இதில் சிக்கி வட மாநில தொழிலாளர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனின்றி 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

படுகாயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில்,சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

9 dead in Ennore Thermal Power Plant collapse accident


கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் விவகாரம்: விஜய்-யின் விளக்கம்...




Seithipunal
--> -->