உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரே ஆம்னி பேருந்து விபத்து - 8 பேர் காயம்
8 injured in private Omni bus accident in ulundurpet police station opposite
உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரே தனியார் ஆம்னி பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பயணிகள் காயமடைந்தனர்.
கோவையில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் எதிரே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 8-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் மற்றும் அப்பகுதியில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து போலீசார் விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
8 injured in private Omni bus accident in ulundurpet police station opposite