12ம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. இளைஞருக்கு 70 ஆண்டுகள் சிறை..!
70 year Jail For Youth who sexually abused Girl
கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், போடிபட்டி பகுதியை சேர்ந்தவர் நவரசன் (27). அங்கு உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2020 ஆண்டு தனது மனைவி அழிப்பதாக கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் அதனை செல்போனில் வீடியோவாக வேண்டும் வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் எனவும் அந்த மாணவியை மிரட்டி உள்ளார். அந்த மாணவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கண்ணீருடன் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர், இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் அவருக்கு எழுபது ஆண்டுகள் சிறை தண்டனையும் 40 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
English Summary
70 year Jail For Youth who sexually abused Girl