மத்தாப்பு பற்ற வைத்தபோது பரிதாபம்.! தீப்பிடித்து 7 வயது சிறுமி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் மத்தாப்பு பற்ற வைத்தபோது தீப்பற்றி 7 வயது சிறுமி உடல் கருகி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் திங்களூர் கிழக்கு புதூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சரவணன் (48). இவரது மகள் சஸ்விதா (7) அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சஸ்விதா சம்பவத்தன்று பொல்லாநாயகன் பாளையத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்பொழுது அங்கு பூஜை அறையில் உள்ள விளக்கில் மத்தாப்பு பற்ற வைத்தபோது எதிர்பாராத விதமாக சஸ்விதாவின் பாவாடையில் தீப்பற்றி, மளமளவென பரவியது. இதை எடுத்து பலத்த காயம் அடைந்த சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திங்களூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

7 year old girl died after lighting the maththapu on fire in erode


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->