இலங்கையில் இருந்து 7 பேர் அகதிகளாக தமிழகம் வருகை.!
7 tamil srilankan refugees comes to tamilnadu
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் தொழில்கள் பாதிப்படைந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றன.
அதன் காரணமாக இலங்கை அரசுக்கு எதிராக கொழும்பு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் விலை உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தமிழர்கள் கள்ளப்படகு மூலம் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்து தஞ்சமடைய வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை இலங்கை வவுனியா பகுதியில் இருந்து 2 குடும்பங்களைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 7 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். அரிச்சல்முனை கடல் பகுதிக்கு பைபர் படகு மூலம் வந்திறங்கிய அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டு, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அவர்களை அகதிகள் முகாமிற்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதுவரை 23 குடும்பங்களைச் சேர்ந்த 83 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
7 tamil srilankan refugees comes to tamilnadu