சென்னை விமான நிலையம்: ரூ.69.60 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் - 2 பெண்கள் கைது - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூபாய் 69.60 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இரண்டு பெண்களை கைது செய்தனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பொன்னாட்டம் விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பெண் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை மேற்கொண்டனர்.

இதில் அந்தப் பெண் உள்ளாடைக்குள் முறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்த ரூ.38.70 லட்சம் மதிப்பிலான 572 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் கொழும்புவில் இருந்து மற்றொரு விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் சோதனை செய்ததில் அவரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவரிடம் இருந்த ரூபாய் 40.90 லட்சம் மதிப்பிலான 815 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து ரூ.69.60 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்தி வந்த இரண்டு பெண்களையும் கைது செய்த அதிகாரிகள் அவர்களிடம் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

69 lakhs 60 thousand worth gold seized and 2 woman arrested in chennai airport


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->