மர்மமான முறையில் குழந்தை இறப்பு., சந்தேகித்த மருத்துவர்கள் எடுத்த முடிவு.! - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சி அருகே மர பேட்டையைச் சேர்ந்த செல்வராஜ், என்பவர் கூலித் தொழிலாளியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு செல்வி என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மோனிஷா என்ற 6 வயது சிறுமி ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இரவு வழக்கம் போல மோனிஷா வீட்டில் படுத்து உறங்கியுள்ளார். பின்பு அதிகாலை வாயில் நுரை தள்ளியபடி மோனிஷா கிடக்கவே, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Image result for death seithipunal

மருத்துவர்கள் சிறுமியை பரிசோதனை செய்து குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெற்றோர் சிறுமியின் உடலை எடுத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது மருத்துவர்கள் சிறுமியின் உடலை கொடுக்க முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருக்கின்றது கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கின்றோம். அதன் பின்னர் உடலை பெற்றுக் கொள்ளலாம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 years girls death in pollachi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->