சென்னையில் இருசக்கர வாகனம் மோதி 6 மாத குழந்தையுடன் பெண் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 6 மாத குழந்தையுடன் பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சென்னை என்.எஸ்.கே நகர் பகுதியை சேர்ந்தவர் பூங்குழலி. இவர் 6 மாத பெண் குழந்தையுடன் அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா வளைவு அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார். 

அப்போது அவ்வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் ஒன்று திடீரென பூங்குழலி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பூங்குழலி மற்றும் குழந்தை படுகாயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பூங்குழலியும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, போதையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவருடன் வந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

6 month child and women killed in Twowheeler accident in chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->