சென்னை : உள்ளாடைக்குள் மறைத்து கடத்தல்... ரூ.55 லட்சம் தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட ரூபாய் 55 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சுங்க அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் முன்னுக்குப் பின்னும் முரணாக பதில் அளித்ததால் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரிடமிருந்த ரூ.54.98 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 70 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த வாலிபரை கைது செய்தனர். மேலும் இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக வாலிபரிடம், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

55 lakhs worth gold seized in Chennai airport


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->