கிருஷ்ணகிரியில் பரிதாபம்.! கிணற்றில் மூழ்கி 5 வயது அக்காள், 3 வயது தம்பி பலியான சோகம்.! - Seithipunal
Seithipunal


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த அக்கா-தம்பி கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கொல்லஅள்ளி பூலான்குட்டை பகுதியை சேர்ந்தவர் மாதப்பன். இவரது மனைவி சந்திரிகா. இவர்களது மகள் ஸ்ரீநிகா (5), மகன் அனிருத் (3). இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரீநிகா மற்றும் அனிருத் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது எதிர்பாராத விதமாக அங்கிருந்த கிணற்றில் இரண்டு பேரும் தவறி விழுந்துள்ளனர். இதில் இரண்டு பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து விளையாட சென்ற குழந்தைகளை காணவில்லை என்று தாய் சந்திரிகா தேடியுள்ளார். அப்பொழுது இரண்டு குழந்தைகளும் கிணற்றில் எழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து இது சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 years old girl and 3 years old boy drowned well in kirishnagiri


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->