தமிழகத்தில் மார்ச் 13ம் தேதி 5 மாவட்டங்களுக்கு விடுமுறை - அரசு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வருகின்ற மார்ச் 13ஆம் தேதி 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்ற பிறகு தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு திட்டங்களை ஆய்வு செய்து வருகிறார்.

 

அந்த வகையில் மார்ச் 5, 6-ஆம் தேதிகளில் மதுரை மண்டலத்துக்கு உள்பட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அந்த வகையில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலப்பணித் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி, மார்ச் 4ஆம் தேதி மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்வதால் அன்றைய தினம் (சனிக்கிழமை) திங்கட்கிழமை அட்டவணைப்படி ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும். அதற்கு பதிலாக மார்ச் 13ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 districts holidays on March 13 in tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->