திடீர் ட்விஸ்ட்... டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை.!! குடிமகன்களுக்கு அதிர்ச்சி
5 days leave for Tasmac Shop in tamilnadu
தமிழ்நாட்டில் மக்களவை பொது தேர்தல் நடைபெறுவதை ஒட்டி நாளை முதல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகளும் தமிழ்நாட்டில் முழுவதுமாக மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் குடிமகன்கள் செய்வது அறியாது திகைத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மற்றொரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் பார்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்பட்டு வரும் மதுபான கூடங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்பட்டு வரும் மதுபானக்கூடங்கள் என அனைத்து வகை மதுபான கூடங்களும் மகாவீர் ஜெயந்தி நாளான வரும் ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொழிலாளர் தினமான மே 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதம் 4 நாட்களும், வரும் மே 1ம் தேதி என 5 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
5 days leave for Tasmac Shop in tamilnadu