திருவள்ளூர் அருகே பரபரப்பு.. ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 438 கிலோ கஞ்சா பறிமுதல் .!!
438 kg ganja seized from Andhra Pradesh near Thiruvallur
வேனின் ரகசிய அறையில் இருந்த மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்..!
ஆந்திராவில் இருந்து வேன் மற்றும் காரில் பெரும் அளவில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடியில் மத்திய போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது ஆந்திராவில் இருந்து வந்த வேனில் சோதனை செய்த போலீசார் அந்த வாகனத்தின் மேல் தளத்தில் ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்த ரகசிய அறையை உடைத்து சோதனை செய்ததில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான 438 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து அந்த வேனில் இருந்த மூன்று பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
English Summary
438 kg ganja seized from Andhra Pradesh near Thiruvallur