வரும் மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வரும் மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் 20ஆம் தேதி சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு மார்ச் 4ம் தேதி வைகுண்டர் 190 வது அவதார தினம் கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து சாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வரும் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 4ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக  அம்மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

4 districts local holiday on March 4 in tamilnadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->