அரியலூர் : அடகு கடையில் ஓட்டை போட்டு 219 சவரன் தங்க நகைகள் கொள்ளை.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள பாப்பாக்குடி கடைத்தெருவில் ராஜஸ்தானை சேர்ந்த சங்கர் என்பவர் நகை அடகு வைக்கும் கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி இரவு 7 மணிக்கு கடையை பூட்டிவிட்டு சங்கர் வீட்டிற்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வழக்கம் போல் சங்கர் மற்றும் அவரது கடையில் வேலை செய்யும் தில்கேஷ், அஜித் ஆகியோர் கடையை திறந்தனர்.

அப்போது கடையை திறந்த போது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் சங்கர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கடையின் பின்பக்க சுவற்றை மர்ம நபர்கள் ஓட்டை போட்டு லாக்கரில் வைத்திருந்த 209 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.31 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. 

அதனைத் தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அடகு கடையின் பின் பக்கத்தில் இருந்து முன்பக்கமாக வந்து நின்றது ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 laks gold jewelery was stolen from a pawn shop in Ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->