மீண்டும் அட்டூழியம் செய்யும் இலங்கை கடற்படையினர்...!எல்லை தாண்டியதாக குற்றச்சாட்டு: 4 படகுகள் பறிமுதல், 22 மீனவர்கள் சிறைபிடிப்பு!
Sri Lankan Navy commits atrocities again Accused crossing border 4 boats seized 22 fishermen arrested
எல்லைக் கோட்டை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி, தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.
இதனுடன், அவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்து அரசுடைமையாக மாற்றும் கடுமையான நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொள்வதால், மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்தச் சூழலில், கச்சத்தீவு அருகே வழக்கம்போல் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த 22 மீனவர்கள், 4 படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் திடீரென சிறைப்பிடிக்கப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களை காங்கேசந்துறை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் மீனவர்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பே மேலும் 25 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தொடர்ந்து நடைபெறும் இந்த நடவடிக்கைகள் கடலோர மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
English Summary
Sri Lankan Navy commits atrocities again Accused crossing border 4 boats seized 22 fishermen arrested