3 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. சிறுமி பரிதாப பலி...!
3-year-old girl bitten by stray dogs
தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள பாட்லியா கிராமத்தில் நந்தினி (3) சிறுமி வசித்து வருகிறார். அங்குள்ள பண்ணை ஒன்றில் பிற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சில தெருநாய்கள் சிறுமியை கடிக்க ஆரம்பித்தன. இதனால் செய்வதறியாது தவித்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டியடித்தனர்.
படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மத்தியபிரதேசத்தில் தெருநாய்களால் பல குழந்தைகளுக்கு ஆபத்து நேர்வது வழக்கமாக உள்ளது.
English Summary
3-year-old girl bitten by stray dogs