3 வயது சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்.. சிறுமி பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


தெருநாய்கள் கடித்ததில் 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம், தார் மாவட்டத்தில் உள்ள பாட்லியா கிராமத்தில் நந்தினி (3) சிறுமி வசித்து வருகிறார். அங்குள்ள பண்ணை ஒன்றில் பிற குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு சில தெருநாய்கள் சிறுமியை கடிக்க ஆரம்பித்தன. இதனால் செய்வதறியாது தவித்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அங்கு அருகில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் பெற்றோர்கள் ஓடிவந்து நாய்களை விரட்டியடித்தனர்.

படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மத்தியபிரதேசத்தில் தெருநாய்களால் பல குழந்தைகளுக்கு ஆபத்து நேர்வது வழக்கமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3-year-old girl bitten by stray dogs


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->