பறக்கும் ரெயில் பாதையில் பெண்களை குறிவைத்து நகை கொள்ளை...! தொடர் செயின் பறிப்பு கொள்ளையன் கைது! - 16 சவரன் நகைகள் மீட்பு
Jewelry Robberies Targeting Women Elevated Train Line Serial Chain Snatcher Arrested 16 Sovereigns Jewelry Recovered
சென்னை நகரின் கடற்கரை ரெயில் நிலையத்திலிருந்து பரங்கிமலை வரை இயங்கும் பறக்கும் ரெயில் சேவை பாதையில், பெருங்குடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் பெண்களை குறிவைத்து தொடர் சங்கிலி பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வந்தன.

மேலும் 2022 முதல் 2024 வரை இடைவிடாமல் நடைபெற்ற இந்த குற்றச்செயல்கள் பயணிகளிடம் அச்சத்தை விதைத்த நிலையில், ரெயில்வே தனிப்படை காவலர்கள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த தொடர் குற்றங்களுக்கு முடிவுகட்டும் வகையில், தஞ்சாவூர் சேர்ந்த 26 வயதான விஜயராகவன் என்ற இளைஞரை பெருங்குடியில் காவலர்கள் சிக்கவைத்து கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து சுமார் 16 சவரன் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
English Summary
Jewelry Robberies Targeting Women Elevated Train Line Serial Chain Snatcher Arrested 16 Sovereigns Jewelry Recovered