3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.! - Seithipunal
Seithipunal


3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 25 அரசு மற்றும் தனியார் சட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2290 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 17ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது வரை 16,227 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் விண்ணப்ப பதிவுக்கான கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 31ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படிப்புக்கு விருப்பமுள்ள மாணவர்கள் http://www.tndalu.ac.in என்ற இணையதளம் மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 year LLB course apply date extended


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->