தண்ணிப்பாம்பை கடித்துக் கொன்ற "வைரல் வீடியோ".. 3 பேர் அதிரடி கைது..!!
3 people arrested for killed a water snake in ranipet
அரக்கோணம் பகுதியில் தண்ணிப்பாம்பை வாயால் கடித்து க்கொன்ற மூன்று பேரை வரத்துறை கைது செய்துள்ளது!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சின்ன கைனுர் பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன், சூர்யா, சந்தோஷ். விவசாய கூலி தொழிலாளர்களான மூவரும் நேற்று காலை 8 மணி அளவில் சின்ன கைனூர் ஏரிக்கரை ஓரம் சுத்தி கொண்டிருந்த தண்ணிப்பாம்பை பிடித்து அதனை மூவரும் வாயால் கடித்து கொன்று துப்பியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அதன் அடிப்படையில் ஆற்காடு கனகசரக அலுவலர் சரவணபாபு விசாரணை நடத்தி மூன்று பேரையும் இன்று கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளார். மேலும் மூவரும் பாம்புகளை பிடித்து கொன்று அதன் தோலை விற்பனை செய்து வந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
3 people arrested for killed a water snake in ranipet