சென்னை || விஷவாயு தாக்கி மூவர் பலி.. ஒருவருக்கு தீவிர சிகிச்சை..! - Seithipunal
Seithipunal


விஷவாயு தாக்கி மூவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்தவர் பிரமோத். இவரது வீட்டின் தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியை பக்கத்து வீட்டுகாரர்களுடன் சேர்ந்து திறக்க முயற்சி செய்துள்ளார்.

அப்போது அவர்களை விஷவாயு தாக்கியது. இதனால், சம்பவ இடத்திலேயே மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் அவர்களின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விஷவாயு தாக்கி சாருநாதண் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 Killed In Poisson gas attack


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->