திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமணிகுப்பம் ஊராட்சியில் உள்ள வசனம்பட்டு கிராமத்தில் வசித்து வருபவர் கலையரசன், இவரது மனைவி நித்தியா. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி, மகன் ஆகிய மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். இதனை இன்று காலை பார்த்த கிராம மக்கள் மப்பேடு காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் மகனுக்கு விஷம் கொடுத்து உயிரிழந்த பின்னரே தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து அருகில் உள்ள குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

3 family members get suicide in thiruvallur


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->