நாகையில் 200 கிலோ கஞ்சா பறிமுதல் ! காவல்துறை அதிரடி! - Seithipunal
Seithipunal


நாகை அருகே 200 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற 4 பேரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் போதைப் பொருள்களின் எண்ணிக்கையும் போதைப்பொருள்களை பயன்படுத்துவது எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனைக்குரியது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 65 க்கும் மேற்பட்டோர் உயிரிழரந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காவல்துறை தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது கஞ்சா விற்பனை செய்யும் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாகை அருகே மேலப்பிடாகையில் 200 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 கார்களில் 2 00கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற மணிராஜ், கௌதம், தக்ஷிணாமூர்த்தி, சிவமூர்த்தி என்பவர்களை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

200 kg of ganja caught in Nagai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->