#திருப்பூர் : 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - வாலிபருக்கு 20 ஆண்டு சிறை - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்(29). இவர் திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே உள்ள பின்னலாடை நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நாகராஜன் கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை ஏமாற்றி வெளியே அழைத்துச் சென்றுள்ளார். பின்பு நாகராஜன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இதையறிந்த சிறுமியின் தாய் உடனடியாக இந்த சம்பவம் குறித்து அவிநாசி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் நாகராஜனை கைது செய்தனர். 

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகராஜனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 6000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 years prison for the youth who sexually harassing a 12 year old girl in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->