மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...! 82 வயது முதியவருக்கு 20 ஆண்டு சிறை..! நீதிமன்றம் அதிரடி - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 82 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள காரியாபட்டி பகுதியை சேர்ந்தவர் சர்க்கரை முத்து (82). இவர் சம்பவத்தன்று 16 வயதுடைய மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை மகளிர் போலீசார், சர்க்கரை முத்துவை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனநலம் குன்றிய 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சக்கரை முத்துவுக்கு 20 ஆண்டுகள் சிறை, தண்டனையும் ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

20 years prison for the Oldman who sexually harassing a mentally challenged girl in virudhunagar


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->