#திருப்பூர் | மூன்று அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி விபத்து - 20 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் மூன்று அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 20 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து 30 பயணிகளுடன் இன்று காலை பல்லடம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதையடுத்து பிச்சாகவுண்டன்புதூர் டவுன் பஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி இறக்கிக் கொண்டிருந்தது. அப்பொழுது கும்பகோணத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென டவுன் பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இதையடுத்து அவ்வழியாக வந்த மற்றொரு அரசு பேருந்து கோவை பேருந்தின் பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

20 injured in 3 government bus collision in Tiruppur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->