குழியில் சிக்கிய வட மாநில தொழிலாளிகள்.. போராடி மீட்ட வீரர்கள்.! கண்ணீருடன் சென்னை மக்கள்.! - Seithipunal
Seithipunal


கால்வாய் அமைக்கின்ற பணியில் விபத்து ஏற்பட்டு இரு வட மாநிலத்தவர்கள் உயிருக்கு போராடிய நிலையில் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் மழை நீர் கால் வாய் அமைக்கின்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், இன்று மழை நீர் கால்வாய் அமைக்கின்ற பணியில் இரு வட மாநிலத்தவர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அவர்கள் வேலை செய்து கொண்டிருந்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அவர்கள் குழிக்குள் சிக்கி உயிருக்கு போராட ஆரம்பித்துள்ளனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து குளிக்கும் சிக்கி உயிருக்கு போராடிய இரு வட மாநில தொழிலாளர்களையும் போராடி மீட்க முயற்சித்தனர்.

ஆனால் நீண்ட நேரமாக முயற்சித்த நிலையில் அருகில் இருந்த பலரும் பதட்டத்திற்கு ஆளாகினார்கள். பின் இரு மணிநேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அவர்களை உயிருடன் மீட்டனர். மீட்டு உடனடியாக அவர்களை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரைக் கொடுத்து இரு வட மாநில தொழிலாளர்களையும் வீரர்கள் மீட்ட நிலையில் அவர்கள் உயிருடன் வெளியே வந்ததை கண்ட பொதுமக்கள் பலரும் ஆர்ப்பரித்தனர். இந்த சம்பவம் மிகவும் உணர்ச்சி பூர்வமானதாக இருந்த நிலையில் அருகில் இருந்த பலரும் குழிக்குள் சிக்கியவர்கள் வெளியே வந்தபோது ஆனந்த கண்ணீரில் மூழ்கினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2 north indians saved from rainwater drynage work accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->